பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 3வது கட்ட கலந்தாய்வு

இந்தாண்டு பொறியியல் சேர்க்கை அதிகரிப்பு: உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.சென்னையில் தொழில்நுட்ப இயக்குநகரத்தில் கலந்தாய்வு குறித்து உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி ஆய்வு மேற்கொண்டார். இதையடுத்து, உயர்கல்வித்துறை அமைச்சர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

இந்த ஆண்டு பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கையில், காலியிடங்கள் இருக்காது.

பொறியியல் படிப்பு மாணவர் சேர்க்கைக்கான 3வது கட்ட கலந்தாய்வு வரும் 13ம் தேதி துவங்க உள்ளது. கணினி அறிவியல், எலக்ட்ரானிக்ஸ், ஐடி பிரிவில் அதிக மாணவர்கள் சேர்ந்துள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.
Post a Comment (0)
Previous Post Next Post