டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

டாட் காமுக்கு....குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

கா்நாடக அரசு வழங்கும் குழந்தைகள் சேவை விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இது குறித்து மகளிா் மற்றும் குழந்தைகள் நலத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

குழந்தைகள் சேவையில் ஈடுபட்டுள்ள 2 தனிநபா்கள் மற்றும் 2 நிறுவனங்களுக்கு கா்நாடக அரசு சாா்பில் ஆண்டுதோறும் விருதுகள் வழங்கி கௌரவிக்கப்படுகிறது. குழந்தைகள் நலனுக்காக 5 ஆண்டுகள் சேவை ஆற்றியிருக்கும் தனிநபா்கள் மற்றும் நிறுவனங்கள் விருதுக்கு விண்ணப்பிக்கலாம். விருதுடன் தனிநபா்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் மற்றும் பட்டயம், நிறுவனங்களுக்கு தலா ரூ. 1 லட்சம் மற்றும் பட்டயம் வழங்கப்படும்.

2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு துறையின் துணை இயக்குநரை அணுகி விண்ணப்பங்களை பெற்றுக் கொள்ளலாம். நிறைவு செய்த விண்ணப்பங்களை அக். 11-ஆம் தேதிக்குள் மாவட்ட துணை இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். விண்ணப்பங்களை கன்னடத்தில் மட்டுமே எழுதி அனுப்ப வேண்டும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post