உடுமலை அரசு கலைக்கல்லூரியில் 2021- 2022ம் கல்வியாண்டில் காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கு செப்டம்பர் 6 ஆம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது.
கலந்தாய்வு:
தமிழகத்தில் 2021 – 2022ம் கல்வியாண்டில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது. இக்கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 448 மாணவர்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் 239 மாணவர்களும் என 687 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் கலந்தாய்வு நடைபெற்று. தமிழில் 30 மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் 18 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லுாரியில் சேர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது இந்நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த விவரம், தரவரிசைப்படி விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். அவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.
கலந்தாய்வு:
தமிழகத்தில் 2021 – 2022ம் கல்வியாண்டில் கடந்த ஜூலை 26ம் தேதி முதல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. கல்லூரி முதலாமாண்டு மாணவர்களுக்கு பாடப்பிரிவுகளுக்கு ஏற்ப மாணவர் சேர்க்கை கலந்தாய்வு ஆன்லைன் வாயிலாக நடைபெற்று வருகிறது. மற்ற கல்லூரிகளை தொடர்ந்து உடுமலை அரசு கலைக்கல்லூரியில் இளநிலை பாடப்பிரிவு மாணவர்களுக்கான சேர்க்கை நடத்தப்பட்டது. இக்கலைக்கல்லூரியில் 14 இளநிலை பட்டப்படிப்புகளும், 10 முதுநிலை பட்டப்படிப்புகளும் உள்ளது. இங்கு நடப்பு கல்வியாண்டில் கலை மற்றும் வணிகவியல் பாடப்பிரிவுகளில் 448 மாணவர்களும், அறிவியல் பாடப்பிரிவுகளில் 239 மாணவர்களும் என 687 பேர் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். இதில் தமிழ் இலக்கிய பாடப்பிரிவில் கலந்தாய்வு நடைபெற்று. தமிழில் 30 மாணவர்களுக்கும், ஆங்கில இலக்கியப் பாடப்பிரிவில் 18 மாணவர்களும் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு கல்லுாரியில் சேர நிர்வாகம் அனுமதி வழங்கியுள்ளது இந்நிலையில் உடுமலை அரசு கலைக்கல்லூரியில் காலியாக உள்ள இளநிலை பாடப்பிரிவுகளுக்கான கலந்தாய்வு செப்டம்பர் 6ம் தேதி மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நடைபெற உள்ளது. இரண்டாம் கட்ட கலந்தாய்வு குறித்த விவரம், தரவரிசைப்படி விண்ணப்பித்திருக்கும் மாணவர்களுக்கு எஸ்.எம்.எஸ் வாயிலாக தெரிவிக்கப்படும். அவர்கள் மட்டுமே இந்த கலந்தாய்வில் கலந்து கொள்ள வேண்டும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார்.