ஜூலை முதல் அகவிலைப்படி உயர்வு - ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தல்

2022 ஜன., முதல் அம லாகும் அகவிலைப்படி உயர்வை மத்திய அரசு போன்று 2021 ஜூலை முதல் முன்தேதியிட்டு அமல்படுத்த வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.

கூட்டமைப்பின் பொது செயலாளர் பேட்ரிக் ரெய் மாண்ட் அறிக்கை:

முதல்வர் ஸ்டாலின் நேற்று சட்டசபையில் 110வது விதியின்கீழ் அகவிலைப்படி உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். இதை 2021 ஜூலை முதல் வழங்க வேண்டும். ஆசிரி யர்கள், அரசு ஊழியர்கள் 16 மாத அகவிலைப்படி யினை அரசின் கொரோனா கால செலவினங்களுக்குவிட்டு கொடுத்து உள்ள தால் இந்த கோரிக்கை நிறைவேற்ற வேண்டும்.

ஜாக்டோ ஜியோ போராட்ட காலத்தை பணிக்காலமாக கருதுதல், போராட்ட கால பழிவாங் கும் நடவடிக்கை மற் றும் இடமாறுதல் ரத்து, போன்ற அறிவிப்புகள் மகிழ்ச்சியளிக்கிறது. இவ்வாறு கூறியுள்ளார்.
Post a Comment (0)
Previous Post Next Post