கண் பரிசோதகர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்கலாம் - மாவட்ட ஆட்சியர் செய்திக் குறிப்பு

“கோவை பெரியபோது அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொலைநோக்கு கண் மருத்துவ மையத்துக்கு, கண் பரிசோதகர் பணியிடம் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது. ஒப்பந்த அடிப்படையில் மாதம் ஒன்றுக்கு ரூ.10,500 தொகுப்பூதியத்தில் மாவட்ட நலச் சங்கம் மூலம் இந்த பணியிடம் நிரப்பட உள்ளது. இந்த பணியிடத்துக்கு தகுதியான நபர்கள், உரிய விண்ணப்பத்துடன், 10-ம் வகுப்பு கல்வி தகுதி சான்று, 12-ம் வகுப்பு சான்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்வி நிறுவனத்தில் கண் பரிசோதகர் பட்டப் படிப்பு, பட்டய கண் பரிசோதகர் படிப்பில் தேர்ச்சி பெற்றதற்கான சான்று, முன் அனுபவ சான்று ஆகியவற்றுடன் ரேஸ்கோர்ஸில் உள்ள சுகாதாரப்பணிகள் துணை இயக்குநர் அலுவலகத்தில் நடைபெறும் நேர்காணலில் கலந்துகொள்ளலாம்"என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Post a Comment (0)
Previous Post Next Post