ஆசிரியர் தினமே வருக ! - ஆசிரியர் தின கவிதை - கவிஞர்: ந. டில்லிபாபு

ஆசிரியர் தினமே வருக ! - ஆசிரியர் தின கவிதை - கவிஞர்: ந. டில்லிபாபு# தலைப்பு: ஆசிரியர் தினமே வருக! # பள்ளி: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி- தாளவாடி# கல்வி மாவட்டம்: சத்தியமங்கலம்# மாவட்டம்: ஈரோடு# அலைபேசி: 7639104683, 9498020899.....

ஆசிரியர் தினம்வாருமோ ? - எங்கள் ஆசை நிறைவேறுமோ?

மாணவர் சமுதாயமோ ? - அது மாறித் தடுமாறுமோ? கல்வி இடம்சேருமோ ? -

அந்த கங்கை கடல்சேருமோ? கானல் நீராகுமோ ?

எங்கள் கல்வி வீணாகுமோ? உண்மை பொய்யாகுமோ? - அது ஊமைக் கனவாகுமோ?

நன்மை நமைச்சேருமோ ? - அது நாளும் சுமையாகுமோ?

காலம் கலிகாலமோ? நல்ல கற்சிலை கல்லாகுமோ?

ஆலம் விழுதாகுமோ ? - அது

ஆயுள் வரைநீளுமோ?

ஏழு எட்டாகுமோ? - கல்வி

எட்டாக் கனியாகுமோ?

ஏக்கம் ஏராளமோ? - கல்வித்

தாக்கம் தாராளமோ ?

ஞானம் கருவாகுமோ ? - புது

ஞாலம் உருவாகுமோ?

ஆசிரியர் தினம்வாருமோ ? - எங்கள்

ஆசை நிறைவேறுமோ?
Post a Comment (0)
Previous Post Next Post