சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 60ஆக உயர்த்தப்படும் என தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் இன்றைய கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசுகையில்,
சத்துணவு ஊழியர்களுக்கான ஓய்வு வயது 58லிருந்து 60ஆக உயர்த்தப்படும் என அறிவித்தார். மேலும், அரசுப் பள்ளிகளில் காலியாக உள்ள இடைநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றார்.